close
Choose your channels

அப்படியெல்லாம் போக முடியாது பதில் சொல்லிட்டு போங்க: ரியோவிடம் மீண்டும் சிக்கிய சுரேஷ்

Tuesday, October 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அனிதா சம்பத் கூறியதுபோல் புரமோவில் வரவேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே சுரேஷ் சக்ரவர்த்தி அனைவரிடமும் பிரச்சனை செய்கிறாரே என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது

ஏற்கனவே அனிதா சம்பத், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், ரியோ, வேல்முருகன் என கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் பிரச்சனையை ஏற்படுத்தி விட்ட சுரேஷ் இன்று போட்டியாளர்கள் அனைவர் முன் பேசும் போது இங்கே குரூப்பிஸம் இருக்கிறது எனவும், என்னை எல்லோரும் கார்னர் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்

இதனை அடுத்து பொங்கி எழுந்த ரியோ, ‘இங்கே குரூப்பிஸம் இருக்கிறது என்பதை எப்போது கண்டுபிடித்தார்கள் என்று கேள்வி கேட்டு மடக்கிய போது, பதில் சொல்ல முடியாத நேரத்தில் எல்லாம் வழக்கம்போல் நழுவிச் செல்லும் சுரேஷ், இப்பொழுதும் நழுவி செல்கிறார். இதனால் டென்சன் ஆகிறார் ரியோ

புரமோவில் மட்டுமின்றி நிகழ்ச்சியில் காட்டப்படும் பெரும்பாலான காட்சிகளில் தான் வரவேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து போட்டியாளர்களிடமும் சுரேஷ் பிரச்சனை செய்கிறாரோ என்ற சந்தேகத்தை பார்வையாளர்கள் கிளப்பி வருகின்றானர். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் பார்த்து மனப்பாடம் செய்து சனம் உள்பட ஒருசில போட்டியாளர்கள் வந்துள்ளனர் என்று சுரேஷ் கூறியது அவருக்கும் பொருந்துமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos