close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்ட வனிதா! 

Friday, August 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் கிராமத்து கலைகளின் டாஸ்க் காரணமாக சண்டை சச்சரவு இல்லாமல் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்து வந்த ஹவுஸ்மேட்ஸ் தற்போது அந்த டாஸ்க் முடிவடைந்ததும் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டனர்.

குறிப்பாக வத்திக்குச்சி வனிதா இன்று தனக்கு தானே 'மோஸ்ட் பாப்புலாரிட்டி' விருதினை வழங்கி கொண்டார். அவரை அடுத்து சேரனை இரண்டாவது இடத்திற்கும்,, லாஸ்லியாவை மூன்றாவது இடத்திற்கும் அவரே தேர்வு செய்தார். மேலும் யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் பாப்புலாரிட்டி என்பது திட்டு வாங்குவதையும் சேர்த்துதான் என்றும் கூறினார்.

நாளை கமல் வரும் நாள் என்பதால் இந்த வாரம் இதுவரை எந்த பஞ்சாயத்தும் இல்லாத நிலையில் இன்று அனேகமாக வனிதா ஒரு பஞ்சாயத்தை ஆரம்பித்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.