close
Choose your channels

அன்பு குரூப்புக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பா? சனம், அனிதா எங்கே?

Monday, January 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையிலான அன்பு குரூப் மற்ற போட்டியாளர்களை வெளியேற்றிக்கொண்டு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் ஒரு வழியாக அன்பு குரூப் கடைசி நேரத்தில் சுக்குநூறாய் உடைந்தது

இந்த நிலையில் இந்த வாரம் கடைசி வாரம் என்பதும் வரும் ஞாயிறு அன்று இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து மீண்டும் எவிக்டான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர்களாக வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது

அந்த வகையில் இன்றைய முதல் புரோமோவில் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர். அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சிறப்பு விருந்தாளியாக இன்று வருகை தந்துள்ளனர்

இதில் அர்ச்சனாவின் அன்பு குரூப்பை சேர்ந்த மூவர் உள்ளே வந்து இருப்பது நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. சனம், அனிதா எங்கே என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் நாளை மற்ற போட்டியாளர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அர்ச்சனா, ரமேஷ் மற்றும் நிஷாவை பார்த்ததும் ரியோ, கேபி, சோம் ஆகியோர்கள் உற்சாகத்தின் எல்லையை அடைந்தார்கள் என்பது சொல்ல தேவையே இல்லை. மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினர்கள் வந்திருப்பதால் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.