close
Choose your channels

ஆம்பள பையனான்னு கேட்டா யாருக்கு தான் கோபம் வராது: தனியே புலம்பிய பாலா!

Tuesday, January 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றும் இன்றும் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் முதல் இடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று அனைத்து போட்டியாளர்களும் தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய இரண்டாம் புரமோவில் பாலா மற்றும் ஆரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும் அந்த வாக்குவாதத்தின் போது ’நீ ஆம்பள பையன் தானே’ என்று ஆரி கேட்டது பாலாஜிக்கு சுர்ரென்று கோபம் ஏறியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாலாஜி கேமரா முன் புலம்பி வருகிறார். எவ்வளவு நாகரிகமாக அவரிடம் கேமுக்கு கூப்பிட்டேன் வாங்க விளையாடலாம் என்று. சுற்றி நின்று எதையும் போட்டு விடக்கூடாது, ஓடிப் பிடித்து விளையாடுவது தான் கேம் என்று தெரியும். கமல் அவர்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன், நான் என்னுடைய தவறை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக நான் இந்த வீட்டில் எது பண்ணினாலும் தவறு என்று கூறினால் என்ன அர்த்தம்?

நீ ஆம்பள பையன் தானே’ என்று ஆரி கேட்டது தப்பு என்று இந்த வீட்டில் யாராவது சொன்னார்களா? யாருக்குத்தான் கோபம் வராது ’நீ ஆம்பள பையனா? என்று கேட்டால்? சரி ஓகே நான் கோபப்படவில்லை, இனி மேல் கோபப்பட மாட்டேன்’ என்று தனியாக பாலாஜி புலம்பும் காட்சிகள் இன்றைய மூன்றாம் புரமோவில் உள்ளது. மொத்தத்தில் பாலாஜி-ஆரி சண்டை கடைசி நாள் வரை தீராது என்றே தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.