close
Choose your channels

கமல் முன்னிலையில் ஆக்ரோஷமாக மோதும் சிபி-அக்சரா: என்ன காரணம்?

Sunday, November 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 41 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கமல் முன்னிலையில் சிபி மற்றும் அக்சரா ஆகிய இருவரும் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகள் முதல் புரமோவில் இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்களுக்கு இந்த ஆறு வாரங்களில் முதுகில் குத்தியவர் யார் என அடையாளம் காட்டுங்கள் என கமல் கேட்க, அதற்கு பதிலளித்த நிரூப், முதுகில் குத்துவது என்றால் அபினய்யை சொல்வேன் என்று கூற பதிலுக்கு நிரூப்பை அபினய் கூறுகிறார்.

இந்த நிலையில் அக்சரா கூறும்போது, சிபி தான் முதுகில் குத்துபவர் என்றும், மனதில் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம், நான் உன்னுடைய நண்பன் தான் என்று கூறிக் கொண்டு அதன் பின் திடீரென முதுகில் குத்துவார் என்று அவர் கூறினார். இதனை அடுத்து சிபி திடீரென எழுந்து, அவருக்கு கேப்டனாக இருக்க எந்த தகுதியும் இல்லை என தோன்றியது என்று கூற, உடனே அக்சரா ’நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் நீ என்னை பேசிக் கொண்டிருக்கின்றாய் என்று கூறி, கமல் சார் கேட்டதற்கு நான் விளக்கம் கூறிக் கொண்டிருக்கிறேன் கூற இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

இன்றைய முதல் புரோமோவில் கமல் முன்னிலையிலேயே ஆவேசமாக அக்சரா மற்றும் சிபி மோதிக் கொள்ளும் காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.