close
Choose your channels

என் மனைவிக்கு 100 பவுன் போட்டேன்: இமான் அண்ணாச்சியின் நெகிழ்ச்சியான கதை!

Thursday, October 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதை, சோக கதையை தெரிவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று இமான் அண்ணாச்சி தன்னுடைய கதையை கூறினார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்ததாகவும், சென்னைக்கு வந்து மளிகை கடை, காய்கறி கடை, தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் என வேலை பார்த்துக்கொண்டே சினிமா வாய்ப்பு தேடியதாகவும், அப்போது ஒரு தொலைக்காட்சியில் தனக்கு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த நிகழ்ச்சியில்தான் 100% திறமையை நிரூபித்த தனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு வந்ததாகவும் கூறினார்.

மேலும் தன்னுடைய மனைவி 25 பவுன் நகை கொண்டு வந்தார் என்றும் அந்த நகை கொஞ்சம் கொஞ்சமாக வறுமை காரணமாக கரைந்து விட்டது என்றும் ஆனால் நான் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் ஜெயித்த பின்னர் அதே மனைவிக்கு 100 பவுன் நகை வாங்கி கொடுத்தேன் என்று கூறியவுடன் சக போட்டியாளர்கள் கைதட்டி பாராட்டினார்கள்.
இதுவரைக்கும் பிக் பாஸ் டைட்டிலை ஹீரோ வாங்கியிருக்கிறார், ஹீரோயின் வாங்கி இருக்கிறார், ஆனால் முதல் முறையாக ஒரு நகைச்சுவை நடிகர் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியதும் பிரியங்கா கலகலவென சிரித்தது நிகழ்ச்சியை கலகலப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இமான் அண்ணாச்சிக்கு ஒரு சிலர் லைக்ஸ், சிலர் டிஸ்லைக் கொடுத்ததை அடுத்து டிஸ்லைக் கொடுத்தவர்களிடம் மட்டும் விளக்கத்தை கேட்டு அந்த விளக்கத்தையும் அவர் ஜாலியாக எடுத்துக் கொண்டார் என்பது அவருடைய மெச்சூரிட்டியை காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.