close
Choose your channels

உங்களிடம் மாற்றம் தொடங்கிய நாள் இதுதான்: பிரியங்காவிடம் கமல்ஹாசன்

Saturday, December 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா ஆரம்பத்தில் பிக்பாஸையே கலாய்த்து செமையாக விளையாடினார் என்பதும் ஆனால் நாளாக ஆக அவருடைய சுயரூபம் வெளிப்பட்டது என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய முந்தைய புரமோவில் பிரியங்கா குறித்து அக்சரா கூறிய போது ’தேவையில்லாமல் அடுத்தவர் விஷயங்களில் பிரியங்கா தலையிடுகிறார் என்றும், அவருக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற வகையில் செயல்படுகிறார் என்று கூறினார்.

இதனை அடுத்து இன்றைய அடுத்த புரமோவில், பிரியங்காவிடம் கமல்ஹாசன் கூறிய போது ’நீங்கள் கண்ணாடி பிம்பம் டாஸ்க்கில் கையை பிடித்துக்கொண்டு ஒரு டாஸ்க் செய்தீர்கள் அல்லவா? அன்றையிலிருந்து உங்களிடம் ஒரு மாற்றத்தை நான் பார்க்கிறேன். இப்பொழுது அக்சரா கூறிய குற்றச்சாட்டை இதற்கு முன்னர் யாராவது சொல்லி இருக்கிறார்களா என்று யோசித்து பாருங்கள் என்று கமல் கேட்டபோது அதற்கு பதில் சொல்லாமல் பிரியங்கா இருந்தபோது ’சொல்லியிருக்கிறார்கள்’ என்று கமல் கூறினார்.

நான் என்னுடைய பிரச்சனையை மற்றவர்கள் மேல் எடுத்துக் கொண்டு சென்றது கிடையாது’ என்று பிரியங்கா கூறியபோது, ‘அவ்வாறு நீங்கள் நினைக்கின்றீர்கள், நீங்கள் அதை நன்றாக யோசித்துப் பாருங்கள்’ என்று கமல் கூறியவுடன் ’நான் என்னை மாற்றிக் கொள்கிறேன்’ என்று பிரியங்கா கூறுகிறார்.

மொத்தத்தில் இன்றைய கமலஹாசன் எபிசோடு பிரியங்காவுக்கு சரியான பாடம் கற்பிக்கும் எபிசோட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.