close
Choose your channels

செருப்பை கழட்டிட்டு ஒரு அடி: ராஜூ ஜெயமோகனின் உச்சபட்ச ஆத்திரம்

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 40வது நாளாக நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளின் முன்னோட்டமாக புரமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று ஏற்கனவே இரண்டு புரமோக்களில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் வந்த நிலையில் தற்போது ராஜூ ஜெயமோகன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய இருவருக்கும் தண்டனை வழங்கும்படி பிக்பாஸ் தெரிவிக்கிறார்.

முகத்திற்கு நேராக கருத்துக்களை சொல்ல தைரியம் இல்லாமல் தனித்தன்மையை இழந்து நிற்கும் இரண்டு நபர்களை தேர்வு செய்து சொல்ல வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

உடனே பிரியங்கா, சிபி, தாமரை, இசைவாணி உள்பட போட்டியாளர்கள் ராஜூ ஜெயமோகன் மற்றும் இமான் அண்ணாச்சியை தேர்வு செய்கின்றனர் இதனை அடுத்து இருவருக்கும் தண்டனை வழங்கும்படி பிக்பாஸ் உத்தரவிட இருவரையும் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து போட்டியாளர்கள் அவர்களது தலையில் தண்ணீரை ஊற்றுகின்றனர்.

அப்போது அப்போது ராஜூ ஜெயமோகன் செருப்பை கழட்டி விட்டு ஒரு அடி அடிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறும் காட்சியோடு இன்றைய புரமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும்போது இன்று ராஜூ ஜெயமோகனின் ஆத்திரம் விபரீதத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.