close
Choose your channels

கடந்த வார ஸ்டிரைக்கிற்கு பழிவாங்கும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள்.. சாப்பாட்டில் கை வைத்ததால் பரபரப்பு..!

Friday, October 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் சமையல் செய்யாமல் ஸ்டிரைக் செய்ததால் பிக் ஹவுஸில் இருக்கும் போட்டி யாளர்கள் சாப்பிட முடியாமல் திண்டாடினர். இந்த நிலையில் இந்த வாரம் நாங்கள் சொன்னால் தான் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் சாப்பிட வேண்டும் என்று கேப்டன் யுகேந்திரன் புதிய விதியை விதித்துள்ளதால் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர்.

கடந்த வாரம் தங்களை சாப்பிட விடாமல் செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பிக் ஹவுஸ் போட்டியாளர்கள் கேப்டன் மூலம் இதனை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடையும் மாயா, கேப்டனிடம், ‘நீங்கள் பிக் ஹவுஸ் போட்டியாளர்களுக்காக விளையாடுகிறீர்கள், உங்களுடைய தனிப்பட்ட எண்ணம் என்று தெரிந்து விட்டது, யுகேந்திரன் சாப்பாட்டில் கை வைத்தால் எரிக்கும் என்று ஆவேசமாக பேசுகிறார். மேலும் ஜோவிகா தூண்டிவிட்டு தான் யுகேந்திரன் இந்த முடிவை எடுத்ததாகவும் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் இன்று ஸ்மால் ஹவுஸில் உள்ள போட்டியாளர்கள் சாப்பிட முடியாத நிலையில் இருப்பதால் அவர்கள் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.