close
Choose your channels

நடிகையை ஸ்கேன் எடுத்தபோது படம் பிடித்த மர்ம நபர்: போலீஸார் விசாரணை

Thursday, May 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டரில் நடிகையை ஸ்கேன் செய்த போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அவரை படம் எடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கருணாஸ் நடித்த ’அம்பாசமுத்திரம் அம்பானி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை நவ்நீத் கௌர். இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் எம்பியாக உள்ளார் என்பதும் இவரது கணவர் ரவி ராணா எம்எல்ஏவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே வீட்டின் முன் போராட்டம் நடத்தியதாக நவ்நீத் மற்றும் அவரது கணவர் ரானா செய்யப்பட்டனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த நவ்நீத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு உள்ள ஸ்கேன் சென்டர்களில் ஸ்கேன் எடுக்கப்பட்ட போது மர்ம நபர் ஒருவர் அவரை படம் பிடித்ததாக நவ்நீத் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.