close
Choose your channels

கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் என்ன? சிபிஐ அறிக்கை தாக்கல்

Tuesday, December 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ஆம் ஆண்டு அவருடைய பண்ணை வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக சிபிஐ இதுகுறித்து விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது கலாபவன் மரணம் குறித்த அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையில் கலாபவன் மணியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்ததால் தான் அவர் மரணம் அடைந்தார் என்றும், அவருக்கு பச்சை காய்கறிகள் உண்ணும் பழக்கம் இருந்ததால் அவரது உடலில் க்ளோர்பைரிபோஸ் என்ற பூச்சிக் கொல்லிகள் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கலாபவன் மணியை யாரும் கொலை செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.