close
Choose your channels

த்ரிஷாவுக்கு எதிரான மானநஷ்ட வழக்கு.. மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

Saturday, December 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா உள்பட 3 பேருக்கு எதிராக மன்சூர் அலிகான் ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் த்ரிஷா அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் குஷ்பு, சிரஞ்சீவி உள்பட பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான் இந்த பிரச்சனையை முடித்துக் கொண்டார். ஆனால் திடீரென அவர் த்ரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகிய மூன்று பேர் மீது தலா ஒரு கோடி ரூபாய் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையிலும் விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்குப்பதிவு செய்த மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்வதோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும் அபராத தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரண்டு வாரங்களில் அவர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos