close
Choose your channels

மீண்டும் இணையும் தனுஷ்-மாரி செல்வராஜ்: வேற லெவல் அறிவிப்பு..!

Monday, April 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணைந்து உருவாக்கிய வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் புதிய திரைப்படங்களை தயாரிக்காத நிலையில் தற்போது இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

வொண்டர்பார் நிறுவனத்தின் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் ஜி ஸ்டுடியோ சவுத் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் ஒடிடிக்காக ‘வாழை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் கபடி கதையம்சம் கொண்ட திரைப்படத்தை அடுத்து இயக்க இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் தற்போது திடீரென வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos