close
Choose your channels

தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் படம் 'கர்ணன்' இரண்டாம் பாகமா?

Sunday, April 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகிய ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் மாரிசெல்வராஜ் உடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய இருப்பதாகவும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் அறிவித்திருந்தார்

இதனை அடுத்து இந்த படம் ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கும் தனுஷிடம் போனிலேயே மாரி செல்வராஜ் கதையை கூறியதாகவும், அந்த கதை தனுஷூக்கு பிடித்துவிடவே உடனே இந்த படத்தின் கதையை டெவலப் செய்யுமாறு மாரி செல்வராஜிடம் கூறியதாகவும் தெரிகிறது

மேலும் இந்த படம் ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்றும் ஜாதி குறித்த கதையம்சம் இல்லாமல் பொதுவான சமூகப் பிரச்சனையை மையப்படுத்தும் கதை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இரண்டாம் பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.