close
Choose your channels

சொன்ன சொல்லை காப்பாற்றிய லாரன்ஸ்: என்ன செய்தார் தெரியுமா?

Sunday, June 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குநருமான லாரன்ஸ் சொன்ன சொல்லை காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் வெளியானபோது அந்த படத்திற்கு பின் பார்வதி அம்மாளின் கதை இருப்பது பலருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து பார்வதி அம்மாள் சொந்த வீடுகூட இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்த ராகவா லாரன்ஸ் அவருக்கு வீடு கட்டி தருவதாக நேரில் பார்வதி அம்மாளை சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் தமிழக அரசு பார்வதி அம்மாளுக்கு இடம் ஒதுக்கி வீடு கட்டி தருவதாக அறிவித்ததையடுத்து பார்வதி அம்மாள் மற்றும் அவருடைய மகள் மற்றும் இரண்டு மகன்கள் ஆகியோர்களுக்கு வீடுகட்ட ஒதுக்கிய பணத்தை கொடுக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்தார்.

இந்த நிலையில் தற்போது பார்வதி அம்மாள் குடும்பத்தினரை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வீடு கட்ட ஒதுக்கிய பணத்தை பார்வதியம்மாள், அவருடைய மகன்கள், மகள் ஆகியோர்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.