close
Choose your channels

சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை: இயக்குனர் ரஞ்சித்

Saturday, December 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ரஞ்சித், 2வது படமான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கிய ரஞ்சித் இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

இயக்குனர் ரஞ்சித் தனது படங்களில் தன்னுடைய சொந்த கருத்துக்களை திணிப்பவர் என்றும், குறிப்பாக ரஜினியின் இரண்டு படங்களில் ரஜினி ரசிகர்களுக்கான காட்சிகளை வைக்காமல் ஜாதி, சமூகம், நில உரிமை போன்ற கருத்துக்களள வைத்தவர் என்றும் விமர்சனம் செய்யப்படுவதுண்டு.

இந்த நிலையில் விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவிசெய்து வருகிறார்கள் என்றும், ஆனால் சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்றும் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். ரஞ்சித் குறிப்பிடும் அந்த சில நடிகர்கள் யார் என்பது குறித்த சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய விவாதமே நடந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.