close
Choose your channels

விஜய்-சூர்யா இணைந்து நடித்த படத்தின் இயக்குனருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

Tuesday, August 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், சூர்யா இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல மலையாள இயக்குனர் சித்திக், தமிழில் விஜய் - சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே.

இதையடுத்து விஜயகாந்த் ’நடித்த ’எங்கள் அண்ணா’ பிரசன்னா, அப்பாஸ் நடித்த ’சாது மிரண்டால்’ விஜய் நடித்த ’காவலன்’ மற்றும் அரவிந்த்சாமி நடித்த ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் ஏராளமான மலையாள படங்களையும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சித்திக் அவர்களுக்கு திடீரென திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு எக்மோ கருவி துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.