close
Choose your channels

விஜயகாந்த் உடல்நலம் குறித்து தேமுதிக அறிக்கை!

Wednesday, May 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை குறித்து தேமுதிக தலைமைக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளி வந்துள்ளன. மேலும் அவருக்கு மருத்துவர்களின் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கை வெளியாகும் என்றும் தகவல் வெளியானது

இந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழகம் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது. தலைமை கழகத்தின் இந்த அறிக்கையை அடுத்தே தேமுதிக தொண்டர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos