close
Choose your channels

ரஜினிக்கு குரல் கொடுத்த மலேசிய ஆர்ட்டிஸ்ட் இவர்தான்

Tuesday, June 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரஜினி ரசிகர்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமின்றி முதல்முறையாக வேற்று மொழி படம் ஒன்று மலாய் மொழியில் ரிலீஸ் ஆகும் பெருமை 'கபாலி' படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் தமிழ், ரசிகர்களை விட பலமடங்கு மலாய் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தூள்ளனர். தங்கள் தாய்மொழியில் ரஜினி படத்தை பார்க்கும் சந்தோஷத்தை அவர் இம்முறை அனுபவிக்க உள்ளனர்
இந்நிலையில் இந்த படத்தின் மலாய் மொழி டப்பிங் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கபாலி ரஜினிக்காக மலேசிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அருண்குமரன் என்பவர் குரல் கொடுத்துள்ளார். அதேபோல் தன்ஷிகாவின் கேரக்டருக்கு ஃபாத்தியா லத்திப் என்பவர் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.