close
Choose your channels

இந்தியாவில் முதல்முதலாக கடல் தேவதை கேரக்டரில் நடிக்கும் தமிழ் நடிகை: யார் தெரியுமா?

Friday, January 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடல் தேவதை குறித்த பல திரைப்படங்கள் ஹாலிவுட்வில் வெளியாகி இருந்தாலும் முதல் முறையாக கடல் தேவதை கேரக்டரில் தமிழ் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

’துப்பாக்கி முனை’ என்ற திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு ஃபேண்டசி திரைப்படம் என்றும் இந்த படத்தில் கடல் தேவதை கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்க வைப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக கடல் தேவதை குறித்த கதையம்சம் கொண்ட திரைப்படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கடல் தேவதை கேரக்டருக்கு ஆண்ட்ரியா மிகப்பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த படத்தில் சுனைனா, பிந்துமதி, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக 60 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் ஏராளமான அனிமேஷன் பணிகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.