close
Choose your channels

அமீர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த ஞானவேல் ராஜா அப்பா.. என்ன காரணம்?

Wednesday, March 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அமீர் மீது ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்குடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தந்தை அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே பருத்திவீரன் படம் குறித்த பிரச்சனை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அமீருக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்தனர் என்பதை பார்த்தோம். அதன்பின்னர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பின் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் அமீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ஞானவேல் ராஜாவின் தந்தை விகே ஈஸ்வரன் என்பவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக தெரிகிறது. இதையடுத்து தான் மன வேதனைக்கு உள்ளானதாக தெரிவித்துள்ள விகே ஈஸ்வரன், அமீர் மீது மான நஷ்ட வழக்கத்தை தொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வழக்கு குறித்து அமீர் என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே போதை பொருள் கடத்தல் வழக்கில் அமீரிடம் விசாரணை செய்யப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு புதிய வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.