close
Choose your channels

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்

Thursday, March 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' திரைப்படம் வெளிவந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றது. இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அவர் நடித்து வந்த குப்பத்து ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அவர் நடித்து வந்த இன்னொரு படமான 'சர்வம் தாள மையம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மேகாலயா மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தவுடன் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும், இந்த படத்தை இன்னும் ஒருசில மாதங்களில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடிவேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரவியாதவ் ஒளிப்பதிவும் அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.