ஒரு படம் கூட சேர்ந்து நடிக்கல.. உமாபதி - ஐஸ்வர்யா காதல் எப்படி ஆரம்பித்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக திரையுலக நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கும் போது காதல் உருவாகும் என்றும் அந்த காதல் திருமணம் வரை செல்லும் என்பதையும் பார்த்து இருக்கிறோம்.
ஆனால் தம்பி ராமையாவின் மகன் உமாபதி மற்றும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படம் கூட நடிக்காமல் காதல் ஆரம்பித்தது எப்படி என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ’சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உமாபதி கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா வந்திருந்த போது தான் உமாபதிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நட்பு ஏற்பட்டது என்றும் அதன் பிறகு அந்த நட்பு காதலாக மாறியது என்பதும் தெரியவந்துள்ளது.
அது மட்டும் இன்றி அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் திறப்பு விழாவுக்கு தம்பி ராமையா தனது குடும்பத்துடன் சென்றிருந்தார் என்றும் அப்போதுதான் இந்த காதல் குறித்து இருவரும் பேசி விரைவில் திருமணம் நடத்துவது குறித்து உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments