close
Choose your channels

நான் என் வாழ்க்கையில் சிபிஐ அலுவலகத்திற்கு செல்வேன் என நினைக்கவில்லை: விஷால்

Tuesday, November 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் என் வாழ்க்கையில் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக செல்வேன் என்று நினைக்கவில்லை என நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் விஷால் இன்று மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவர் நடித்து வெளியான ’மார்க் ஆண்டனி’ என்ற படத்திற்கு சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று அவர் ஆஜராகி உள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படம் ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில் ஹிந்தி மொழியில் சென்சார் செய்வதற்காக சென்சார் அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து அதிரடியாக மகாராஷ்டிரா மாநில அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாறியது. இந்த நிலையில் இன்று விசாரணைக்காக விஷால் மற்றும் அவருடைய மேலாளர் ஆகிய இருவரும் விசாரணைக்காக மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகினர்.

இது குறித்து விஷால் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்று கொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் சிபி அலுவலகத்திற்கு செல்வேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.