close
Choose your channels

ஆர்யா, சிம்பு படங்களை இயக்குவேன்: சந்தானம்

Saturday, February 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் வரும் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சந்தானம், இயக்குனர் ராம்பாலா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சந்தானம் பேசியதாவது:

நடிகராக இருப்பதை விட தயாரிப்பாராக இருப்பது தான் கஷ்டம். வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்கு தாமதம் ஆகிறது.

நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

இந்த படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஷ்ரதா சிவதாஸை நாயகியாக தேர்ந்தெடுத்தோம். ’மொட்டை’ ராஜேந்திரன், விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள். பேய் படத்திற்கு காட்சிகள் தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும். அதற்காக கேமராமேன் தீபக் கூடுதலாக உழைத்திருக்கிறார். இவ்வாறு சந்தானம் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.