close
Choose your channels

விஜய் தந்தைக்கு என்னதான் நடந்தது? பரபரப்பு தகவல்

Wednesday, August 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கேரளாவில் கார் விபத்தில் காயம் அடைந்ததாகவும், தலையிலும் கழுத்திலும் படுகாயம் ஏற்பட்டதால் அவர் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒருசில மணி நேரங்களாக வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால் உண்மையில் அவருக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. கேரளாவில் தனது அடுத்த படம் குறித்து கதை விவாதத்தில் இருந்ததாகவும் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பாத்ரூமில் இருந்து தவறி விழுந்ததால் சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பினர் கூறியபோது "அவருக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை. இது முற்றிலும் தவறான செய்தியாகும். குளித்துவிட்டு வரும்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடம் உள்ளார்" என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.