close
Choose your channels

பிரபல இயக்குநருக்கு நன்றி தெரிவித்த இளம் நடிகை… வைரலாகும் உருக்கமான பதிவு!

Tuesday, April 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து திறமையான நடிகை எனப்பெயர் பெற்ற நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தற்போது இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து “நானே வருவேன்“ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த அனுபவம் பற்றி அவர் கூறிய கருத்துகள் சமூகவலைத் தளத்தில் கவனம் பெற்றுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “மேயாத மான்“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை இந்துஜா. அதற்குப் பிறகு “மகாமுனி“ திரைப்படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய சர்வதேசத் திரைப்படங்களுக்கான விருதினைத் தட்டிச்சென்றார். மேலும் “மெர்குரி“, “பூமராங்“, “பிகில்“ என அடுத்தடுத்து சிறந்த நடிப்பை வெறிப்படுத்திய இவருக்கு 11 வருடங்களுக்குப் பிறகு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “நானே வருவேன்“ திரைப்படத்தில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடித்து முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அனுபவம் பற்றிய பேசியுள்ள அவர் செல்வராகவன் படத்தில் பணிபுரிந்த விலைமதிப்பற்ற அனுபவத்திற்கு நன்றி. எனக்கு மிகவும் பிடித்தமான செல்வராகவன் சார் உடன் பணிபுரிந்ததைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்குள் இருக்கும் குழந்தை ஆட்டம்போடுது… என உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை இந்துஜா இயக்குநர் செல்வராகவனுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் “நானே வருவேன்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.