close
Choose your channels

மலேசிய அரசின் சிறப்பு அனுமதியை பெற்றது விக்ரமின் 'இருமுகன்'

Friday, June 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் தற்போது மலேசியாவில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மலேசியாவின் Putrajaya என்ற பகுதியில் உள்ள மலேசிய அரசின் மத்திய நிர்வாக அரசு கட்டிடங்களில் இந்த படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன. இந்த படப்பிடிப்பிற்காக மலேசிய அரசு 'இருமுகன்' படக்குழுவினர்களுக்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது

விக்ரம், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேரும் இந்த படத்தில் நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.