close
Choose your channels

12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பிரமாண்டமான படம்.. ஐசரி கணேஷ் கூறிய ஆச்சரிய தகவல்..!

Saturday, January 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய படம் ஒன்று பிரம்மாண்டமாக உருவாகி இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மணிகள் தொடங்கியுள்ளதாகவும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பல பிரமாண்டமான படங்களையும் வெற்றி படங்களையும் தயாரித்தவர் வேல்ஸ் நிறுவன உரிமையாளர் ஐசரி கணேஷ். இவரது தயாரிப்பில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பதும் பலர் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு பிரமாண்டமான படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும் தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு பீரியட் படமாகவும் ஹாரர் கலந்த காமெடி படமாகவும் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகன், நாயகி, இயக்குனர் உட்பட எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த படம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய ஜீவா நடிப்பில் உருவான படமாக தான் இருக்கும் என்று கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.