close
Choose your channels

நெல்சன் வேண்டாம் என கூறிய நடிகர்.. ரஜினியின் அரவணைப்பு.. நெகிழ்ச்சியான பேட்டி..!

Saturday, August 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் சாதனை செய்து வருகிறது. இந்த படம் தமிழில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை இன்னும் ஒரு சில நாட்களில் எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது துணை நடிகர் ஒருவர் சரியாக நடிக்கவில்லை என்பதால் அவரை நெல்சன் நீக்கியதாக கூறப்பட்டது. அப்போது ரஜினி நெல்சனிடம், ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கிறேன் என்று ஆசையுடன் அவர் வீட்டில் சொல்லிவிட்டு வந்து இருப்பார். அவரது ஆசையை நிராசை ஆக்க வேண்டாம்.. அடுத்த காட்சியில் நான் அவருடன் தோளில் கை போட்டு நிற்பது போன்ற ஒரு காட்சியை எடுங்கள் என்று கூறினார். அதன்படி அந்த காட்சி எடுக்கப்பட்டது.


இது குறித்து அந்த நடிகர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, ‘ரஜினி அவர்கள் பக்கத்தில் நின்று நடிக்கவே எனக்கு நடுக்கமாக இருந்தது. அதனால் தான் என்னால் சரியாக நடிக்க முடியவில்லை. சினிமாவில் ஜெயிக்கணும் என்று தான் வருகிறோம், ஆனால் சில நேரங்களில் நம்மால் நடிக்க முடியாமல் போய்விடுகிறது.

இந்த சம்பவத்திற்கு பின் சில நிமிடங்களில் திடீரென ரஜினிகாந்த் என்னை நோக்கி வந்தார், எனக்கு ரொம்ப பயம் ஆகிவிட்டது, உடனே அவர் என் மீது தோள் மீது கை போட்டு, பயப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறினார். எனக்கு அதை பார்த்து ரொம்ப நெகிழ்ச்சி ஆகிவிட்டது, உண்மையில் தலைவர் தலைவர் தான் என்று பேட்டி அளித்திருந்தார். இதுகுறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.