close
Choose your channels

ஜோடியாக பாவாடை தாவணியில் ஜொலிக்கும் ஜான்வி கபூர், குஷி கபூர்… வைரல் புகைப்படம்!

Tuesday, April 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் இருவரும் நேற்று ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இதைத்தவிர சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்துவரும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமும் உண்டு. இந்நிலையில் இவர் ஷிகர் பஹாரியா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தகவலை இருவருமே உறுதிப்படுத்தாத நிலையில் தற்போது நடிகை ஜான்வி கபூர், தங்கை குஷி கபூருடன் இணைந்து ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது இவர்களுடன் ஷிகர் பஹாரியாவும் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

பாலிவுட்டில் நடித்துவரும் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் இயக்குநர் கொரட்டா சிவா இயக்கத்தில் நடிகர் ஜுனியர் என்டிஆருடன் நடிப்பது மூலம் தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இதைத்தவிர இந்தியில் “மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மஹி“ எனும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ஜான்வியின் தங்கை குஷியும் அடுத்து சினிமா துறையில் நுழைய இருப்பதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன. தமிழில் வெளியாகி ஹிட் அடித்த “லவ் டுடே” படத்தின் இந்தி ரீமேக்கில் குஷி கபூர் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி போனி கபூர் – ஸ்ரீதேவியின் மகள்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்துவரும் நிலையில் அவர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காகச் சென்றுள்ளனர். அவர்களுடன் ஷிகர் பஹாரியா இருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

லண்டனில் படித்த ஷிகர் பஹாரியா பன்னாட்டு நிறுவனத்தில் முதலீட்டு ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இதைத்தவிர அவர் மிகச்சிறந்த போலோ வீரராகப் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டும் வந்துள்ளார். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வரும் இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயின் தாய்வழி பேரன் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.