close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த பட பூஜை.. நாளை முதல் படப்பிடிப்பு.. படக்குழுவினர்களின் முழு விவரங்கள்..!

Sunday, August 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படமான ’JR33’ திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கிறார் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளதை அடுத்து நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஜெயம் ரவி ஜோடியாக இந்த படத்தில் நித்யா மேனன் நடிக்க உள்ளார். முதல் முறையாக இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’திருச்சிற்றம்பலம்’ ’96’ படம் போல் ஒரு அருமையான ரொமான்ஸ் படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க இருப்பதாகவும் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி, நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி, ஏஆர் ரகுமான் என சரியான கூட்டணி அமைந்துள்ளதை அடுத்து இந்த படம் ரசிகர்களின் மனதை கவரும் ரொமான்ஸ் படமாக இந்த படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ஜெயம் ரவி ஏற்கனவே ’சைரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அவர் ’ஜெனி’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அவர் ’ஜன கன மன’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘தனி ஒருவன் 2’ படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் அறிவிப்பு வரும் 28ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.