close
Choose your channels

இன்று ஜெயம் ரவி அடுத்த படத்தின் பூஜை.. 3 கதாநாயகிகள், இசைப்புயல் இசை என பிரமாண்டம்..!

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி ’பொன்னின் செல்வன்’ வெற்றிக்கு பின்னர் பிஸியாக நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே அவர் ’இறைவன்’ மற்றும் ’சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் தெரிந்ததே.

மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம் மற்றும் ஜெயம் ரவியின் 30வது படம் ஆகியவைகளின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவியின் இன்னொரு திரைப்படத்தை வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மிஷ்கின் உதவி இயக்குனர் புவனேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஒரு முன்னணி பாலிவுட் நடிகை என மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாகவும் அதன் பிறகு ஜூலை 20ஆம் தேதி முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.