close
Choose your channels

முதல்முறையாக மல்டிபிள் கெட்டப்: படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படம்..!

Tuesday, May 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெயம் ரவி முதல் முறையாக மல்டிபிள் கெட்டப்பில் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்பதும் இவர் தற்போது ’இறைவன்’ ’சைரன்’ மற்றும் ’ஜெயம் ரவி 30’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் ஜெயம் ரவி நடித்த ’சைரன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் இந்த படத்தை இன்னும் ஒரு சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக பல்வேறு வித்தியாசமான கெட்டப்புகளில் ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் அவர் சிறைக்கைதி கேரக்டரில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையில், ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அந்தோணி பாக்யராஜ் என்பவர் இயக்கியுள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவில் ஒரு ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.