close
Choose your channels

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர்

Thursday, June 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தால் சமுத்திரக்கனி உள்பட படக்குழுவினர்கள் அனைவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் மீண்டும் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் வரும் நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜெயம் ரவி தற்போது 'ரோமியோ ஜூலியட்' இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் 'போகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். இந்த படத்தை அடுத்து ஜெயம் ரவி, 'மிருதன்' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஒரு படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சமுத்திரக்கனி படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஜெயம் ரவியின் அடுத்த படம் எது என்பதை அவரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.