close
Choose your channels

கோபித்து கொண்ட ரசிகர்.. 'சென்னைக்கு வா பிரதர்' என சமாதானம் செய்த ஜெயம் ரவி..!

Saturday, February 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெயம் ரவி மீது அவரது தீவிர ரசிகர் ஒருவர் கோபித்துக் கொண்ட நிலையில் ’சென்னைக்கு வாருங்கள்’ என்று அவரிடம் கூறி சமாதானம் செய்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’சைரன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதை அடுத்து இந்த படம் அவருக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ‘சைரன்’ வெளியான முதல் நாளில் ஜெயம் ரவி மதுரைக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார் என்பதும் அது மட்டும் இன்றி மதுரை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் செல்பி எடுக்க முடியாத ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் ஜெயம் ரவியுடன் கோபித்துக் கொண்டுள்ளார். ’உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்தேன், ஆனால் முடியவில்லை, உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் செல்பி எடுத்துக் கொண்டு, என்னை அனுப்பி விட்டீர்கள், இது எனக்கு மிகவும் மோசமான நாள், உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை’ என்று தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள ஜெயம் ரவி ’மன்னிக்கவும் பிரதர், எல்லோரோடும் சேர்ந்து 300 செல்பிக்கும் மேல் எடுத்தேன், உங்களுடன் செல்பி எடுப்பதை நான் எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை, சென்னைக்கு வாருங்கள், செல்பி கிளிக் செய்வோம், வெறுப்பு வேண்டாம், அன்பை பரப்புங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த ரசிகர் தன்னுடைய பதிவை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.