close
Choose your channels

நாங்க யார்கிட்டயும் தோக்க மாட்டோம்: 'களத்தில் சந்திப்போம்' டிரைலர்

Monday, October 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீவா மற்றும் அருள்நிதி முதல் முறையாக இணைந்து நடிக்கும் ’களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90ஆவது திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது.

கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன் படமாக இந்த படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜீவாவுக்கு திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு திரைப்படமாக இந்த திரைப்படத்தை கருதலாம். அதேபோல் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருள்நிதியின் அதிரடி ஆக்சன் நடிப்பும் வழக்கம்போல் சூப்பராக உள்ளது.

மஞ்சிமா மோகன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இரண்டு நாயகிகள் படத்தின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு உதவியுள்ளனர் என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது. ’நான் இவன்கிட்ட தோப்பேன், இவன் என்கிட்ட தோப்பான் ஆனால் நாங்க யாருகிட்டயும் தோக்க மாட்டோம்’ என்ற அசத்தலான வசனத்துடன் நிறைவடையும் இந்த படத்தை ஏன் ராஜசேகர் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.