close
Choose your channels

'கவலை வேண்டாம்' படக்குழுவுக்கு இனி கவலை இல்லை

Friday, August 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீவா நடித்த 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை திருநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இந்திய ரிலீஸ் உரிமையை அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'மனம் கொத்தி பறவை', 'சூது கவ்வும்', 'பீட்சா 2', 'இன்று நேற்று நாளை' போன்ர நல்ல தரமான படங்களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம், புரமோஷன்களையும் பக்காவாக செய்யும் என்பதால் இந்த படத்தின் வெற்றி குறித்து 'கவலை வேண்டாம்' படக்குழுவினர் இனி கவலைப்பட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், ஸ்ருதி ராமகிர்ஷ்ணன், சுனைனா, ஆர்ஜே பாலாஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். 'யாமிருக்க பயமே' இயக்குனர் டிகே' இயக்கியுள்ள இந்த படத்தை எல்ரெட்குமார் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.