close
Choose your channels

'ஜோக்கர்' தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

Saturday, August 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருடைய அடுத்தபடமான 'ஜோக்கர்' நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகி, ஊடகங்களில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளதோடு, அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
இதன் காரணமாக படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு இன்று மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது இன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதுதான் அந்த மகிழ்ச்சி செய்தி. இந்த செய்தியை அவர் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் உறுதி செய்துள்ளார்.
சிவகுமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினரான எஸ்.ஆர்.பிரபு கடந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி தீப்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோக்கர் பட வெற்றி, ஆண்குழந்தை என இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ள எஸ்.ஆர்.பிரபுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.