close
Choose your channels

இன்னும் கொஞ்சம் சேர்த்து பேசியிருக்கணும்: 'நாச்சியார்' வசனம் குறித்து ஜோதிகா

Thursday, February 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானபோது, அந்த டீசரின் முடிவில் ஜோதிகா பேசிய கெட்டவார்த்தை ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து பாலா, ஜோதிகா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வசனம் நிறைய ஆண்கள் பேசிய வசனம் தான் என்றும், முதல்முறையாக ஒரு பெண் பேசியுள்ளதால் விவாத பொருளாகியுள்ளதாகவும் ஜோதிகா கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

'நாச்சியார்’ டீசரில் நான் பேசியது கெட்டவார்த்தைதான். நான் அதை மறுக்கலை. ஆனால் அந்த வார்த்தை இங்கே சகஜமா புழங்குது. நிறைய படங்கள்ல, நிறைய ஆண்கள் அதை பேசியிருக்காங்க. ஒரு பெண் முதன்முறையா பேசறதாலா, விவாதம் ஆகியிருக்குன்னு நினைக்கிறேன். தவிர ’நாச்சியார்’ போல்டான போலீஸ் கேரக்டர். அது அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரியான வசனம். அந்த சீன்ல இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும். ஆனால் நான் ரொம்பவே கன்வின்ஸிங்காதான் பேசியிருக்கேன். ஏன்னா, அது கதையின் ஒரு பகுதி. பொருத்தமான ஒரு இடத்தில் அந்த வசனம் வரும். படம் பார்க்கும்போது ரசிகர்கள் இருநூறு சதவிகிதம் கன்வின்ஸ் ஆகிடுவாங்கன்னு நம்பறேன்’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.