இந்த மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம்: நடிகை ஜோதிகா
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம் என்று ஜோதிகா கூறியது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய இருவரும் சமீபத்தில் ஓய்வெடுக்க கேரளா சென்றனர் என்பது குறித்த செய்தி ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் கேரளாவில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஆயுர்வேதத்தின் மாயாஜாலம் குறித்து நடிகை ஜோதிகா கூறியிருப்பதாவது: திருச்சூர், ராஜா கடற்கரையில் எனது வாழ்க்கையின் மிகவும் நிறைவான 21 நாட்களாக சிறிது நேரம் ஒதுக்கினேன். உண்மையான மந்திரம் இயற்கையில் அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி படைத்தது என்று என்னை நம்ப வைத்த இடம்.
இந்தியர்களாகிய நாம் நமது நாட்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளான ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் அவற்றை மதிப்போம். மேலும் இந்த மாயாஜால அறிவியலை நமது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவோம் என்று ஜோதிகா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.