close
Choose your channels

உங்களின் வாழ்த்து என்னை மிகவும் நெகிழவைத்தது: கலைப்புலி தாணுவின் பதிவு!

Tuesday, October 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உங்களின் வாழ்த்த என்னை நெகிழ வைத்து விட்டது என கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்த்து குறித்து பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய ’அசுரன்’ திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் இந்த விருதை நேற்று கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பெற்றுக்கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற கலைப்புலி எஸ் தாணு, தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தேசிய விருது பெற்ற கலைப்புலி எஸ் தாணு அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியிருந்ததாவது: 67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், அசுரன் படத்திற்காக, சிறந்த பிராந்தியமொழி பட விருது பெற்ற தயாரிப்பாளரும் எனது நண்பருமான கலைப்புலி S. தாணு அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேப்டன் விஜயகாந்தின் வாழ்த்துக்கு கலைப்புலி தாணு அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உங்களின் வாழ்த்து என்னை மிகவும் நெகிழவைத்தது, என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான ‘கூலிக்காரன்’, ‘நல்லவன்’ மற்றும் ‘புதுப்பாடகன்’ ஆகிய படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos