close
Choose your channels

கமல் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்.. பேயறைந்தவாறு இருக்கும் மாயா, பூர்ணிமா, ஜோவிகா..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோவில் பிரதீப் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் உத்தமர்களா என்ற கேள்வியை எழுப்பிய கமல்ஹாசன் கண்டிப்பாக அவர்களையும் தண்டிப்பேன் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் அவர் அடுக்கடுக்காக சில கேள்வியை கேட்ட நிலையில் பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ரவீனா உள்ளிட்டோர் பேயறைந்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார்கள். அதே சமயம் இந்த பக்கம் விசித்ரா, அர்ச்சனா ஆகியோர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இன்றைய புரமோவில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது

நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை தானே, உண்மை என்றால் இது என்ன? அந்த படத்தை போட்டு காமிங்க சார்.. ஒரு குறும்படம்.. அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் போது நீங்க என்ன பண்ணுனீங்க? மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன், அதற்கு ஒரு குறும்படம். சிவப்பு மஞ்சளா தெரிஞ்சிருக்குனா என்ன மாலைக்கண்ணா.. கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே, அது உங்கள் உரிமை தானே, நீங்கள் என்னையும் உங்க கூட பிளேயரா உங்க கூட சேர்த்துக்கிட்ட மாதிரி தெரியுது’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

கமல்ஹாசனின் கேள்விகளுக்கு மாயா, பூர்ணிமா குரூப் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.