close
Choose your channels

வெள்ள மீட்புப் பணியில் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர்

Monday, December 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவிக்கும் மக்களுக்கு நடிகர் சங்கம் உதவ முன்வந்துள்ளது. குறிப்பாக விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்து விநியோகம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


"ரெஸ்க்யு சென்னை" என்ற பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை ஆரம்பித்து செயல்பட்டு வரும் விஷால்-கார்த்தி குழுவினர் சென்னை நுங்கம்பாக்கம் லேடி ஆண்டாள் பள்ளியை மையமாக வைத்து நிவாரண பொருட்களை சேகரித்தும், விநியோகித்தும் வருகின்றனர்.

பால் பவுடர் , சானீட்டேரி நாப்கின் , குடிநீர் , போர்வை முதலிய அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் மற்றும் தொண்டுள்ளம் கொண்டவர்களிடம் இருந்து சேகரித்து அவற்றை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர், மேலும் நடிகர் விஷால் , கார்த்தி மற்றும் குழுவினர் இன்று மாலை கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.