close
Choose your channels

விவசாயி ஆகவே மாறிவிட்ட கார்த்தி

Wednesday, March 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி, ஒரு விவசாயி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விவசாயத்தின் பல நுணுக்கங்களை தெரிந்து கொள்ளவும், ஆர்கானிக் விவசாயம் குறித்து அறிந்து கொள்ளவும், நேரடியாக விவசாயிகளை கார்த்தி சமீபத்தில் சந்தித்துள்ளார்

தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின்போது போலீஸ் அதிகாரிகளை சந்தித்து தனது கேர்கடருக்கு மெருகேற்றிய கார்த்தி, 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்காக தற்போது விவ்சாயம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளை நேரில் சந்துத்துள்ளார். குறிப்பாக ஆர்கானிக் விவசாயம் குறித்த பயிற்சி மையங்களை நடத்தி வரும் வேணுகோபால் என்பவரை அவர் தனது குடும்பத்தினர்களுடன் சமீபத்தில் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது விவசாயத்தின் பல நுணுக்கங்களை அவர் அறிந்து கொண்டதாகவும் தெரிகிறது. தான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர் கொடுக்கும் வகையில் கார்த்தி மிகுந்த சிரத்தை எடுத்து கொள்வது அவருக்கு தொழில்மீது இருக்கும் ஆர்வத்தை காட்டுவதாகவே தெரிகிறது.

கார்த்தி, சாயிஷா, பிர்யா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.