close
Choose your channels

விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கருணாகரன்: எதற்கு தெரியுமா?

Friday, April 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்களுக்கும் இடையே டுவிட்டரில் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்து பலர் அறிந்ததே. இதற்கு காரணம் விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது கருணாகரன் பதிவு செய்த ஒரு டுவீட்தான். அதுமுதல் விஜய் ரசிகர்கள் கருணாகரனை கடுமையான சொற்களில் தாக்க, அதற்கு கருணாகரனும் பதிலடி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் டுவிட்டருக்கு வந்த கருணாகரன், தான் ஓட்டு போட்டுவிட்டதை புகைப்படத்துடன் தெரிவித்தார். மேலும் விஜய் குறித்து தான் பதிவு செய்த கருத்துக்கு வருந்துவதாகவும், தனது கருத்துக்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டுவீட்டில், 'நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க ஒருசில வார்த்தையை நான் பயன்படுத்தியது தவறுதான். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் மிகவும் விரும்பும் நடிகர்களில் ஒருவர் விஜய். அவருக்கும் இது தெரியும். சமூகவலைத்த்தில் நான் பயன்படுத்திய எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என்று கருணாகரன் கூறியுள்ளார். இத்தனை மாதம் கழித்து கருணாகரன் திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்? என்ற வியப்பு பலருக்கு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.