close
Choose your channels

நயன்தாராவை அடுத்து சுராஜை வெளுத்து வாங்கிய தமன்னா

Monday, December 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகள் பணத்திற்காக எவ்வளவு கிளாமராகவும் நடிக்க தயங்குவதில்லை என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய 'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜூக்கு நடிகை நயன்தாரா கடும் கண்டனங்கள் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நயன்தாராவை அடுத்து தற்போது இந்த படத்தின் நாயகியான தமன்னாவும் வெளுத்து வாங்கியுள்ளார்.

இயக்குனர் சுராஜின் அந்த பேட்டி என்னை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியதோடு காயப்படுத்தியும் உள்ளது. இந்த கருத்தை கூறியதற்காக அவர் என்னிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்

ரசிகர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமே நடிகைகளின் நோக்கம். ஆனால் எந்த நிலையிலும் எங்களை காட்சி பொம்மைகள் ஆக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம். நான் நடித்து கொண்டிருக்கும் இந்த 11 வருடங்களில் எனக்கு செளகரியம் தரும் உடைகளை மட்டுமே அணிந்து வருகிறேன்.

பெண்களை கேவலமாக பேசுவதை நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது. இருப்பினும் எனது ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள். இவர் ஒருவர் இப்படி பேசிவிட்டார் என்பதற்காக திரைத்துறையே இப்படித்தான் என்று நினைக்க வேண்டாம் என்று எனது ரசிகர்களிடம் கேட்டு கொள்கிறேன்' என்று தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.