close
Choose your channels

'கவலை வேண்டாம்' படத்தின் கதை இதுதான்

Friday, February 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


ஜீவா தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் போக்கிரி ராஜா' மற்றும் 'திருநாள்' ஆகிய இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இந்த இரண்டு படங்கள் தவிர 'கவலை வேண்டாம்' என்ற படத்திலும் ஜீவா நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் சுனைனா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து நடிகை சுனைனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கோடிட்டு காண்பித்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதை தற்போதை மாடர்ன் காலத்தில் நடைபெறும் காதல் பிரேக் அப் மற்றும் மீண்டும் காதல் குறித்து அலசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தில் சுனைனா ஒருதலையாக ஜீவாவை காதலிப்பதாகவும், ஆனால் ஜீவாவுக்கு காஜல் அகர்வால் மீதுதான் காதல் என்றும், ஜீவாவை தன் பக்கம் இழுக்க சுனைனா செய்யும் முயற்சிகளும், அந்த முயற்சிகளில் இருந்து ஜீவா தப்பிக்கும் விதம்தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் சுனைனா அமைதியான மற்றும் அப்பாவி பெண்ணாகவும், காஜல் அகர்வால் மாடர்ன் காலத்து போல்டான பெண்ணாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.