close
Choose your channels

இதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.. தோழியின் குடும்பத்தை சந்தித்த குஷ்புவின் பதிவு!

Thursday, August 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நமது தோழிகளை சந்திப்பதும் அவர்களுடன் பிரியாணி சாப்பிடுவதை விட வேறு சந்தோசம் எதுவும் இல்லை என நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது தோழியை சந்தித்தது குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது பதிவுகள் பெரும்பாலும் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவருடன் சில மணி நேரங்கள் செலவு செய்தது, பிரியாணி சாப்பிட்டது மற்றும் அவருடைய குழந்தைகளுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சி இருந்தது என்றும் குஷ்பு தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். மேலும் எங்களுடைய குழந்தைகளும் இந்த சந்திப்பில் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து சந்தோஷம் அடைந்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா தொழிலதிபரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயான ரம்பா சமீபத்தில் தனது குழந்தைகளுடன் சென்னை வந்திருந்த நிலையில் குஷ்பு அவரை தனது மகள்களுடன் சந்தித்தார். ரம்பா ஒரு இனிமையான இதயம் கொண்டவர் என்றும் அவரை நாங்கள் ரொம்ப மிஸ் செய்கிறோம் என்றும் மீண்டும் சந்திப்போம் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

குஷ்பு மற்றும் ரம்பா ஆகிய இருவரும் விஜய் நடித்த ’மின்சார கண்ணா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.