close
Choose your channels

திருமணத்திற்கு பின் நயன்தாரா வெளியிட்ட முதல் அறிக்கை: என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Sunday, October 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் முதன்முதலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

’காட்பாதர்’ திரைப்படத்தை வெற்றி படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் திரையரங்கில் இந்த படத்தை கொண்டாடிய அனைவருக்கும் எனது நன்றி.

’காட்பாதர்’ திரைப்படம் மிகச்சிறந்த படம். இந்த படத்தில் இருப்பவர்கள் அனைவருமே மிகவும் அற்புதமானவர்கள். மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுடன் மீண்டும் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக நான் கருதுகிறேன். அவர் வைரம் போன்றவர். எப்போதும் உற்சாகத்துடன் இருப்பார். அவர் செட்டில் இருக்கும் போது ஒவ்வொரு நொடியும் அருமையான நினைவுகளை கொண்டது.

எல்லோரும் ரசிக்கும் நடிகரான சல்மான்கான் அவர்களும் இந்த படத்தில் நடித்ததால் இந்த படம் வலுப்பெற்றது. அவருக்கு என் நன்றி.

மேலும் சத்யதேவ், தான்யா போன்ற நடிகர்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் தங்கள் திறமையால் இந்த படத்தை வெற்றி பெற செய்தனர்.

ஆர்பி சவுத்ரி மற்றும் பிரசாத் ஆகியோர் இந்த படத்தை பிரமாண்டமாக புரமோஷன் செய்து வெற்றி படமாக்கினார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அனைத்து குழுவினருக்கும் எனது நன்றி. ’காட்பாதர்’ படத்தை சூப்பர் ஹிட் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என நயன்தாரா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.